நமது சிறப்பு நிருபர்
சென்னை: அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக்கழகம் என்ற கட்சியை அறிவித்துள்ள சசிகலா, தென்னந்தோப்பு சின்னத்தில் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாகவும் அறிவித்துள்ளார்.
அண்மையில் தான் புதிதாக கட்சி தொடங்கி இருப்பதாக கட்சி கொடியை சசிகலா அறிமுகம் செய்து இருந்தார். இந்நிலையில் இன்று அவர் சென்னை போயஸ் கார்டனில் நிருபர்களை சந்தித்து கட்சியின் பெயர், சின்னம் ஆகியவற்றை அறிவித்தார்.
கட்சியின் பெயர்- அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக்கழகம்
கட்சியின் சின்னம்- தென்னந்தோப்பு
கட்சியின் பெயர், சின்னத்தை அறிவித்த சசிகலா, வரும் சட்டசபை தேர்தலில் தங்கள் கட்சி போட்டியிடும் எனவும் அறிவித்துள்ளார்.
