நமது சிறப்பு நிருபர்சென்னை: அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக்கழகம் என்ற கட்சியை

நமது சிறப்பு நிருபர்

சென்னை: அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக்கழகம் என்ற கட்சியை அறிவித்துள்ள சசிகலா, தென்னந்தோப்பு சின்னத்தில் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாகவும் அறிவித்துள்ளார்.

அண்மையில் தான் புதிதாக கட்சி தொடங்கி இருப்பதாக கட்சி கொடியை சசிகலா அறிமுகம் செய்து இருந்தார். இந்நிலையில் இன்று அவர் சென்னை போயஸ் கார்டனில் நிருபர்களை சந்தித்து கட்சியின் பெயர், சின்னம் ஆகியவற்றை அறிவித்தார்.

கட்சியின் பெயர்- அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக்கழகம்

கட்சியின் சின்னம்- தென்னந்தோப்பு

கட்சியின் பெயர், சின்னத்தை அறிவித்த சசிகலா, வரும் சட்டசபை தேர்தலில் தங்கள் கட்சி போட்டியிடும் எனவும் அறிவித்துள்ளார்.

அதிமுகவினர் சொல்வது என்ன?

தேவர் ஜெயந்தி விழாவில், தினகரன், செங்கோட்டையன், ஓபிஎஸ் உடன் இணைந்து பங்கேற்ற சசிகலா, வீராவேசமாக பேட்டி கொடுத்தார். ஆனால் அவரோடு இருந்த மற்ற மூவரும் வெவ்வேறு கட்சி, கூட்டணிகளில் இணைந்து விட்டனர்.
தனி மரமாக நின்ற சசிகலா, இப்போது தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடுவதாக கூறி கட்சி பெயரையும் அறிவித்துள்ளார். அவரது இந்த செயல், எப்பாடுபட்டேனும் அதிமுக வெற்றியை தடுத்தாக வேண்டும் என்ற நோக்கத்துடன் இருப்பதை வெளிக்காட்டுவதாக இருக்கிறது. இதற்குரிய விளைவுகளை அவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்கின்றனர், அதிமுகவினர்.

தேர்தல் நேரத்தில்…!

ஊழல் வழக்கில் நான்காண்டு சிறை தண்டனை அனுபவித்து வெளியே வந்த சசிகலா, சில ஆண்டுகள் அமைதியாக இருந்தார். அவ்வப்போது, தன் ஆதரவாளர்களை திரட்டி சிறு சிறு கூட்டம் போடுவதும், பேட்டி கொடுப்பதுமாக இருந்தவர், தேர்தல் நெருங்கும் வேளையில் கட்சி தொடங்குவதாக அறிவித்து கொடி அறிமுகம் செய்தார். இன்று கட்சி பெயரையும் அறிவித்துள்ளார்.

Source link