நமது சிறப்பு நிருபர்சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட, தவெக தலைவர் விஜய்

நமது சிறப்பு நிருபர்

சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட, தவெக தலைவர் விஜய் முடிவு செய்திருப்பதாக, முன்பே மார்ச் 12ல் தினமலர் நாளிதழ், இணையத்தில் வெளியான செய்தி உண்மையானது.

நமது நாளிதழ் மற்றும் இணையத்தில் மார்ச் 12ம் தேதி சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட, விஜய் முடிவு செய்துள்ளார். பெரம்பூர் தொகுதியில், கிறிஸ்துவர்களின் ஓட்டுகள் 14 சதவீதம் உள்ளன.

த.வெ.க.,வின் முதல்வர் வேட்பாளராக விஜய் இருப்பதால், ஒரு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்து விடக்கூடாது என்பதற்காக, திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிட, விஜய் முடிவு செய்துள்ளார்.

திருச்சி கிழக்கு தொகுதியில், வெள்ளாளர் சமுதாயத்திற்கு, 50,000 ஓட்டுகள் உள்ளன. தலித் கிறிஸ்துவர் ஓட்டுகளும் கணிசமாக உள்ளதால், அத்தொகுதியில் வெற்றி வாய்ப்பு அதிகம் என, விஜய் கருதுவதாக த.வெ.க., வட்டாரத்தில் பேசப்படுகிறது என கார்டூன் படத்துடன் செய்தி வெளியாகி இருந்தது.

தற்போது, இன்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது போலவே சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதாக விஜய் அறிவித்தார். இதன் மூலம் முன்பே கணித்து துல்லியாக, தினமலர் வெளியிட்ட செய்தி உண்மையானது. இது குறித்து உங்களது கருத்தை கமென்ட் செய்யுங்கள் வாசகர்களே!

Source link