நமது நிருபர்
புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ நடத்தினர். சாலையின் இருபுறமும் திரண்ட தொண்டர்கள் வாகனத்தில் மேல் ஏறியும், கூச்சலிட்டும் அட்ராசிட்டியில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியின் 16வது சட்டசபைக்கான தேர்தல் வரும் 9ம் தேதி நடக்கிறது. மீண்டும் ஆட்சியை கைப்பற்ற திட்டமிட்டுள்ள தே.ஜ., கூட்டணி மொத்தமுள்ள 30 தொகுதிகளில் என்.ஆர்.காங்.,-16; பா.ஜ.,-10; அ.தி.மு.க., மற்றும் ல.ஜ.க., தலா 2 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
தே.ஜ., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தி இருந்தார். அந்தவகையில் இன்று (ஏப்ரல் 04) புதுச்சேரியில் தவெக வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் விஜய் ரோடு ஷோ நடத்தினார். சாலையின் இரு புறமும் ஏராளமான பேர் திரண்டிருந்தனர். அவர்களை பார்த்து திறந்த வேனில் இருந்தபடி கையத்து சென்றார் விஜய். அவரது வாகனத்தை பைக்கில் விரட்டிய ரசிகர்கள், தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
மேலும் பல இரு சக்கர வாகனங்களின் சாவிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். சாலையின் இருபுறமும் திரண்ட தொண்டர்கள் வாகனத்தில் மேல் ஏறியும், கூச்சலிட்டும் அட்ராசிட்டியில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பான சூழல் நிலவியது. தேர்தல் விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்ய வாய்ப்பு உள்ளது.
