நமது நிருபர் இந்தியா – அமெரிக்கா இடையே முக்கியமான கனிம ஒப்பந்தத்தை இறுதி செய்யும் தருவாயில் உள்ளன. வரும்

நமது நிருபர்

இந்தியா – அமெரிக்கா இடையே முக்கியமான கனிம ஒப்பந்தத்தை இறுதி செய்யும் தருவாயில் உள்ளன. வரும் மாதங்களில் விரைவில் முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது என அமெரிக்காவுக்கான இந்திய தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆங்கில செய்தி சேனல் நடத்திய மாநாட்டில், செர்ஜியோ கோர் பேசியதாவது: அமெரிக்க-இந்தியா உறவு வரலாற்றுச் சிறப்பு மிக்க வளர்ச்சியை எட்டும். இந்தியா- அமெரிக்கா இடையே முக்கியமான கனிம ஒப்பந்தத்தை இறுதி செய்யும் தருவாயில் உள்ளன. வரும் மாதங்களில் விரைவில் முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே வலிமையையும், உத்வேகத்தையும் நிரூபிக்கும் குறிப்பிடத்தக்க தொடர் முன்னேற்றங்களை நாங்கள் ஏற்கனவே கண்டிருக்கிறோம். பிரதமர் நரேந்திர மோடிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் இடையிலான தனிப்பட்ட உறவு, இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் முக்கியமான பங்கைக் கொண்டிருந்தது.

வெள்ளை மாளிகையில் டிரம்ப் இல்லாதபோதும் பிரதமர் மோடி ஒரு நண்பராகவே இருந்தார். அந்த நேரத்தில் மோடி அவருடன் தொடர்ந்து நட்பில் இருந்தார், இது உண்மையான நட்பின் அடையாளமாக டிரம்ப் கண்டது. உண்மையில், நாங்கள் ஒரு வருடத்தில் ஒப்பந்தத்தை முடித்துவிட்டோம். ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம் பல ஆண்டுகள் எடுத்தது. இவ்வாறு செர்ஜியோ கோர் பேசினார்.

Source link