– நமது நிருபர் – தமிழக பா.ஜ., மூத்த தலைவரும் நடிகருமான சரத்குமார், இன்று தன் ஆதரவாளர்களுடன், அவசர ஆலோசனை நடத்தி,

– நமது நிருபர் –

தமிழக பா.ஜ., மூத்த தலைவரும் நடிகருமான சரத்குமார், இன்று தன் ஆதரவாளர்களுடன், அவசர ஆலோசனை நடத்தி, அடுத்தகட்ட முடிவு எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த லோக்சபா தேர்தலில், சரத்குமார், தான் நடத்தி வந்த சமத்துவ மக்கள் கட்சியை, பா.ஜ., வில் இணைத்தார்.

அதைத் தொடர்ந்து, அவரது மனைவியும் நடிகையுமான ராதிகா, விருதுநகர் லோக்சபா தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்டு, தோல்வியை தழுவினார்.

பா.ஜ.,வில் இணைந்த பின், சரத்குமாருக்கு, கட்சியில் தேசிய அளவிலோ அல்லது மாநில அளவிலோ பதவி எதுவும் வழங்கப்படவில்லை.

பா.ஜ.,வில் அவருடன் இணைந்த அவரது ஆதரவாளர்களுக்கும் பதவி எதுவும் தரவில்லை. இதனால், அவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.பா.ஜ.,வில் முக்கியத்துவம் தரப்படாததால், தி.மு.க., வில் சரத்குமார் இணைய உள்ளதாக, தகவல் பரவியது. அதை சரத்குமார் மறுத்துள்ளார்.

இந்நிலையில், சரத்குமார், தன் ஆதரவாளர்கள், தன் ரசிகர் மன்ற நிர்வாகிகள் உள்ளிட்டோருடன், சென்னை தி.நகரில் உள்ள ஹோட்டலில், இன்று காலை 10:00 மணிக்கு, அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், அரசியலில் அடுத்தகட்ட பயணம் குறித்து, சரத்குமார் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Source link