நயாரா எனர்ஜி பெட்ரோல் ரூ.5.30, டீசல் ரூ.3 வரை விலை அதிகரிப்பு

அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டத்தை ஈடுகட்ட அரசு தரப்பில் சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆனால், தனியார் நிறுவனங்களுக்கு அத்தகைய இழப்பீடுகள் வழங்கப்படுவதில்லை. அதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள கூடுதல் செலவினத்தின் ஒரு பகுதியை நுகர்வோர் மீது சுமத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக நயாரா எனர்ஜி தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள 1,02,075 பெட்ரோல் நிலையங்களில் 6,967 பெட்ரோல் நிலையங்களை நயாரா எனர்ஜி நிறுவனம் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நயாரா எனர்ஜி நிறுவனம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி தந்துள்ளது.

Source link