நயினார் நாகேந்திரனை ஆதரித்து சாத்தூரில் நிதின் நபின் ரோடு ஷோ

இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை மதுரை வந்த நிதின் நபின், ஹெலிகாப்டர் மூலம் சாத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் வந்து இறங்கினார். பின்னர் காரில், மதுரை பேருந்து நிறுத்தம் பகுதியில் இருந்து திறந்த வாகனத்தில் ரோடு ஷோவில் பங்கேற்றார். அவருடன் நடிகர் சரத்குமார், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் உடன் வந்தனர்.

வழி நெடுகிலும் சாலையின் இருபுறமும் கூடியிருந்த பாஜகவினர் கொடிகளை அசைத்தும், மலர்களை தூவியும், மாலை அணிவித்தும் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வரும் வழியில் குழந்தைகளை தூக்கி கொஞ்சியும், தனக்கு அணிவிக்கப்பட்ட மாலை மற்றும் துண்டுகளை கட்சியினருக்கு வழங்கியும் நிதின் நபின் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். மதுரை பேருந்து நிறுத்தத்தில் தொடங்கி, பேருந்து நிலையம், வட்டாட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை சாலை வழியாக முக்குராந்தல் பகுதியில் ரோடு ஷோ நிறைவடைந்தது. இதில், பாஜக, அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Source link