“நரேந்திர மோடியின் ஆசீர்வாதம் பெற்று பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறேன்!” – வானதி சீனிவாசன் |”Having received the blessings of Modi, I have been announced as the BJP candidate!” Vanathi Srinivasan

நாளை மாலை கோவை வடக்கு தொகுதியில் பிரசாரம் செய்கிறார் எனவும், நாளை மறுதினம் எல் முருகனுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய செல்கிறார் எனவும் தெரிவித்த வானதி , அவருடைய பணியை சரியாக செய்து கொண்டு இருக்கிறார் எனவும் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் ஆசீர்வாதம் பெற்று பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவது தான் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரே நோக்கம் என எல்.முருகன்தெரிவித்தார்.

மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்கள் பல வேதனைகளை சந்தித்து வருவதாகவும், கருணாநிதி ,ஸ்டாலின், உதயநிதி ,இன்பநிதி என குடும்ப ஆட்சி நடைபெற்று வருவதாகவும், இதனால் தமிழகத்தின் வளர்ச்சி பெரிதும் தடைபட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

வானதி ஶ்ரீனிவாசன் & எல் முருகன்

வானதி ஶ்ரீனிவாசன் & எல் முருகன்

தமிழகத்தின் வளர்ச்சிக்கு டபுள் இன்ஜின் சர்க்காராக உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசுதான் தேவை எனவும், கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்திய அரசோடு திமுக அரசாங்கம் அனுசரணையாக இல்லாததால், தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

மீண்டும் மீண்டும் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு, கட்சி என்ன சொல்கின்றதோ அதை செய்வதுதான் ஒரு போர் வீரனின் வேலை, இது கட்சியின் விருப்பம் என்னுடைய விருப்பம் அல்ல எனவும் தெரிவித்தார். எங்கள் கட்சியின் கட்டளையை சாதாரண தொண்டனாக எங்கள் பணியினை செய்கிறோம் எனவும் எல். முருகன் தெரிவித்தார்.

Source link