நல்லூர் சுங்கச்சாவடியில் 4 மாதங்களில் 3வது முறையாக கட்டணம் உயர்வு

சென்னை

சென்னை அருகே சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நல்லூர் சுங்கச்சாவடியில், யாரும் எதிர்பாராத விதமாக நேற்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே அடுத்தடுத்து கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்ட நிலையில், தற்போது வெறும் 4 மாத காலத்திற்குள் 3-வது முறையாக இந்த சுங்கக்கட்டணம் மீண்டும் உயர்த்தப்பட்டிருப்பது தினசரி பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

வாகனங்கள் வாரியான புதிய கட்டண விவரங்கள்:

உள்ளூர் வாகன மாதாந்திர பாஸ்

சுங்கச்சாவடியை சுற்றியுள்ள உள்ளூர்வாசிகளுக்கான மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.350-ல் இருந்து ரூ.360 ஆக (ரூ.10 உயர்வு) அதிகரிக்கப்பட்டுள்ளது.

பேருந்து மற்றும் லாரிகள்

கனரக மற்றும் வணிக வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் ரூ.10 முதல் ரூ.15 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற வாகனங்கள்: இலகுரக வணிக வாகனங்கள் மற்றும் மல்டி-ஆக்சில் வாகனங்களுக்கும் அதற்கேற்ப கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

சுங்கக் கட்டண உயர்வு

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வழக்கமாக ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சுங்க கட்டணங்களை மாற்றியமைக்கும். ஆனால், நல்லூர் சுங்கச்சாவடியில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களை தொடர்ந்து, தற்போது 4 மாதங்களுக்குள் 3-வது முறையாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையிலான பணவீக்க தரவுகள் மற்றும் ‘இணைப்பு காரணி’ தொழில்நுட்ப மாற்றங்களின் காரணமாகவே இந்த அடுத்தடுத்த சுங்கக் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3-வது முறை

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வழக்கமாக ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சுங்க கட்டணங்களை மாற்றியமைக்கும். ஆனால், நல்லூர் சுங்கச்சாவடியில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களை தொடர்ந்து, தற்போது 4 மாதங்களுக்குள் 3-வது முறையாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

விலை உயர்வு அபாயம்

சுங்கக் கட்டண உயர்வால் லாரிகளின் வாடகை அதிகரிக்கும் போது, வியாபாரிகள் அந்த கூடுதல் செலவை பொருட்களின் விலையில் சேர்த்துவிடுவார்கள். இதனால் சாமானிய மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Source link