“நாங்க எப்போதும் மதச்சார்பற்ற கொள்கையில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம்!” – விஜய் |”We will never compromise on secularism!” – Vijay

அவர், “நான் அரசியலுக்கு வந்ததிலிருந்து நிறைய வதந்திகள் சொல்லிக்கிட்டேதான் இருக்காங்க. இவர் அந்த டீமைச் சேர்ந்தவர், இந்த டீமைச் சேர்ந்தவர்னு சொல்லிட்டு இருக்காங்க. ஆனா, இவர் எந்த டீமும் இல்லை. இவர் மக்களுடைய டீம்னு எல்லோருக்குத் தெரிஞ்சதுக்குப் பிறகு வேற என்ன அவதூறு பரப்பலாம்னு முயற்சி பண்ணிட்டு இருக்காங்க.

ஆனா, அது எதுவும் வொர்க் ஆகல. அதைத் தாண்டி, இவனை என்ன பண்ணலாம்ங்கிற முயற்சியிலதான் அந்தக் கூட்டணியில், இந்தக் கூட்டணியில் சேரப் போறார்னு பொய்யான பிரசாரத்தைப் பரப்பினாங்க.

தவெகவின் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு

தவெகவின் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு

இந்த நியூஸ் கேட்டு நீங்க குழம்பியிருப்பீங்க. நாங்க எப்போதும் மதச்சார்பற்ற கொள்கையில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். நம்ம தலைமையில்தான் ஆட்சி என்பது உறுதி.

நம்ம முதல் மாநாட்டுல சொன்ன மாதிரிதான் என்றைக்கும் கொள்கையில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். யார் என்ன அவதூறு பரப்பினாலும் நம்பாதீங்க, இறைவனின் அருளால் நம்முடைய இலக்கை நம்மால் அடைய முடியும்” எனக் கூறியிருக்கிறார்.

Source link