இடது ஜனநாயக முன்னணியின் பிரச்சார விளம்பரம் ஒன்றை நீங்கள் கவனித்தீர்களா? அதில் கேரள முதல்வரின் படத்தின் கீழே வேறு யார் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. அவரைத் தவிர வேறு யாராலும் கேரளத்தை நிர்வகிக்க முடியாது என்பது போன்ற ஒரு தோற்றத்தை அந்த விளம்பரம் உருவாக்குகிறது.
பிரதமர் மோடி பேசும்போதெல்லாம் கடவுள் குறித்தும் இந்து மதம் குறித்தும் பேசுகிறார். ஆனால், கேரளாவின் சபரிமலை குறித்தோ அல்லது சபரிமலையில் திருடப்பட்ட தங்கம் குறித்தோ அவர் பேசுவதில்லை.
நான் பாஜகவை எதிர்த்துப் போராடுகிறேன். அமலாக்கத் துறையினரால் 55 மணி நேரம் விசாரிக்கப்பட்டேன். தற்போதும்கூட நான் பிணையில்தான் வெளியே உள்ளேன். எனது மக்களவை உறுப்பினர் பதவி ரத்து செய்யப்பட்டது. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, பாஜகவின் ஊடகப் பிரிவு ஆகியவற்றின் முக்கிய இலக்காக நான் இருக்கிறேன்.
