கென் கருணாஸ் பேசுகையில், ”நான் ‘யூத்’ கதையை பல தயாரிப்பாளர்களிடம் சொல்லியிருக்கிறேன். அனைவருக்கும் கதை பிடித்திருந்தது.
ஆனால், படத்தின் பட்ஜெட், நான் புதுமுக நடிகர் என்பது போன்ற காரணங்களால், அது தடைப்பட்டது. நான் அவர்களை தவறாக சொல்லமாட்டேன். நான் எப்படி இந்தப் படத்தை எடுப்பேன் என அவர்கள் நம்புவதற்கு கடினமாக இருந்திருக்கலாம்.
பிறகு, என்னுடைய நண்பரும் இயக்குநருமான அம்மாமுத்து சூர்யாவிடம் ‘எப்படியாவது எனது நண்பர்களுடன் சேர்ந்து இந்தப் படத்தை எடுத்துவிடப் போகிறேன்’ என்றேன்.
அப்போதுதான் அவர் இப்போது இந்தப் படத்தை தயாரித்திருக்கும் தயாரிப்பாளர் கருப்பையாவை எனக்கு அறிமுகப்படுத்தினார்.
அவருடனான கதை நரேஷன் முடிந்தப் பிறகு ஒரு டீ கடைக்குச் சென்றோம். அங்கு டீ குடித்துவிட்டு ஜிபே மூலமாக 50 ரூபாய் பணம் செலுத்தக்கூட அவரிடம் பணம் இல்லை.
அவருடைய நண்பருக்கு ஃபோன் செய்து பணம் வாங்கி, டீ-க்கு பணம் செலுத்தினார். அப்படியான நேரத்தில் இந்தப் படத்திற்கு எவ்வளவு பட்ஜெட் தேவைப்படும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார்.
ஆனால், அவர் என்னை முழுமையாக நம்பினார். நான் அவரை முழுமையாக நம்பினேன். அவரிடம் நான் ‘என்னை ஒரு ஹீரோவாக நிறுத்துவதற்கு இந்தப் படத்தை நான் செய்கிறேன்.
உங்களுடைய பணத்திற்கு நான் பதிலளிப்பேன். உங்களுடைய பணத்தை வீணாக்கமாட்டேன்’ என்றேன். என்னை அவர் என் மீது நம்பிக்கை வைத்தார். இன்று நன்றாக சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்.” எனக் கூறினார்.
