பணம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு வேட்பாளராக வந்துள்ள நபரால் எங்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. எனவே, கட்சியினர் ஒட்டுமொத்தமாக பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மேற்கு, கிழக்கு மற்றும் மோகனூர், புதுச்சத்திரம் என 4 ஒன்றிய செயலாளர்கள், ஒரு துணை ஒன்றிய செயலாளர், ஒரு பொதுக்குழு உறுப்பினர் உள்பட மாநகரத்தில் உள்ள 39 வார்டு செயலாளர்கள் மற்றும் 80 சதவீத கிளை செயலாளர்கள் என அனைவரும் பொறுப்பில் இருந்து விலகுவதாக கையெழுத்திட்டு கடிதம் அளித்துள்ளனர்.
இதனை நாங்கள் பொதுச் செயலாளரிடம் வழங்க உள்ளோம். கட்சிக்கு எதிராக வேலை செய்த நபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நாங்கள் தேர்தல் பணி செய்ய இயலாது என்பதால் பதவியில் இருந்து விலகுகிறோம். பொதுச் செயலாளரை, மாவட்ட செயலாளர் தங்கமணி மிரட்டியதால் மோகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
