சிங்கப்பூர்: தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப்பில் புதிய சாதனை படைத்தார் ஆஸ்தா.
சிங்கப்பூரில் தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. பல்வேறு வயது பிரிவுகளில் போட்டிகள் நடக்கின்றன. ‘சீனியர்’ பெண்களுக்கான 200 மீ., ‘பட்டர்பிளை’ பிரிவில் பைனல் நடந்தது.
ஜப்பானின் யு மட்சுரா (2 நிமிடம், 15.91 வினாடி) முதலிடம் பிடித்தார். சிங்கப்பூரில் மேகன் ஜானிஸ் (2 நிமிடம், 17.54 வினாடி) மூன்றாவது இடம் பெற்றார்.
இந்தியா சார்பில் பங்கேற்ற ஆஸ்தா சவுத்ரி, பந்தய துாரத்தை 2 நிமிடம், 17.09 வினாடி நேரத்தில் கடந்து இரண்டாவது இடம் பிடித்தார். இது புதிய தேசிய சாதனை ஆனது. முன்னதாக 2022ல் அபெக் ஷா பெர்னாண்டஸ், 2 நிமிடம் 18.18 வினாடி நேரத்தில் கடந்திருந்தார்.
