முதல்வர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “தமிழ்நாடு மாநில ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணைய தலைவரும், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியுமான தமிழ்வாணன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.
நீதி வழங்கும் பணியிலும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை காக்கும் பணியிலும் திறம்பட செயல்பட்ட தமிழ்வாணனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
