திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளை விட குறைவான தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு, ‘நெஞ்சு பொறுக்குதில்லையே’ என மதிமுக மாவட்டச் செயலாளர் ஒருவர் முகநூலில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு தலா 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மதிமுகவுக்கு 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதிலும், 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் சொந்த சின்னத்திலும் போட்டியிட உள்ளது. கடந்த முறையை விட 2 தொகுதிகள் குறைக்கப்பட்டுள்ளதால் அக்கட்சியினர் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
