ஐதராபாத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், வரும் நாட்களில் பல நகரங்களில் இந்த பிரச்சனை ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் நயாரா நிறுவனம் தற்போது பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
நயாரா என்பது தனியார் நிறுவனம். தற்போதைய சூழலில் அங்கு மட்டும் தான் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதே வேளையில் பிற பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் ரிலையன்ஸ் பெயரில் இயங்கும் பங்க்குகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
