நேத்து நைட்டே ‘ஜனநாயகன்’ பார்த்த முதலமைச்சர் விஜய்: கூட யாரெல்லாம் இருந்தாங்க தெரியுமா? – cm vijay watches jananayagan before release with top officials

இன்று வெளியாகும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியை, நேற்று இரவே சென்னை அடையாறு NFDC தாகூர் மையத்தில் முதலமைச்சர் விஜய் அரசு உயர் அதிகாரிகள், பெற்றோர் மற்றும் படக்குழுவினருடன் இணைந்து கண்டுகளித்தார். பல்வேறு தடைகளைத் தாண்டி படம் வெளியாக உள்ள நிலையில் இந்த சிறப்பு திரையிடல் நடைபெற்றது.

நேற்றிரவு ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியை, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சென்னை அடையாறில் உள்ள NFDC தாகூர் திரையரங்கில் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து கண்டுகளித்தார்.

சென்னை அடையாறில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள இந்திய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் (NFDC) தாகூர் திரையரங்கில் இந்த சிறப்பு திரையிடல் நடைபெற்றது.

ரிலீஸுக்கு முன் சிறப்பு திரையிடல்

முதலமைச்சர் விஜய் நடித்த கடைசி திரைப்படமான’ஜனநாயகன்’இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பல்வேறு தடைகளைத் தொடர்ந்து படம் வெளியாகவுள்ள நிலையில், அதன் சிறப்பு காட்சியை முதலமைச்சர் விஜய் நேரில் கண்டு ரசித்தார்.

மாலை சுமார் 6 மணியளவில் திரையரங்கிற்கு வந்த முதலமைச்சர் விஜய், திரைப்படத்தை முழுமையாக பார்த்துவிட்டு பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

அரசு உயர் அதிகாரிகளும் பங்கேற்பு

இந்த சிறப்பு காட்சியில் முதலமைச்சர் விஜயுடன் அவரது பெற்றோர், திரைப்படத்தின் தயாரிப்பாளர் கே. வெங்கட நாராயணா, தலைமைச்செயலாளர் சாய்குமார்,முதலமைச்சரின் தனிச்செயலாளர் செந்தில்குமார், நிதித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் சித்திக் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் கலந்து கொண்டு திரைப்படத்தை கண்டுகளித்தனர்.

ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ள எதிர்பார்ப்பு

‘ஜனநாயகன்’ திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ரசிகர்கள் திரையரங்குகள் முன்பு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், வெளியீட்டுக்கு முன் நடைபெற்ற சிறப்பு திரையிடலில் முதலமைச்சர் விஜய் பங்கேற்றது ரசிகர்கள் மத்தியில் மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

பல தடைகளுக்கு பிறகு ஜனநாயகன்

கடந்த ஜனவரி மாதமே வெளியாக வேண்டிய ஜனநாயகன் திரைப்படம் தணிக்கை சான்றிதழ் விவகாரம் தொடர்பாக வெளியாகாமல் போனது.படம் ரிலீஸ் ஆகாமல் தொடர்ந்து தள்ளிப்போனது உலகம் முழுக்க உள்ள விஜய் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. அதுமட்டுமின்றிபெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்ட படம் என்பதால் இப்படம் பல கோடி ரூபாய் நஷ்டத்தை வேறு சந்திக்க நேர்ந்தது.

இயக்குநர் கே.பாக்கியராஜ் மறைவு…கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்!

இதற்கிடையில் முழு ஜனநாயகன் படத்தையும் இணையத்தில் கசிய விட்டு இருந்தனர். இது பட குழுவிற்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது. இத்தனை தடைகளுக்குப் பிறகுதான் ஜனநாயகம் இன்றைய தினம் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது.

Source link