ஹை தராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட மருந்து தயாரிப்பு நிறுவனமான ‘அரபிந்தோ பார்மா’, முதலீட்டாளர்களிடமிருந்து, ‘பைபேக்’ முறையில், 800 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை திரும்ப வாங்க உள்ளதாக அறிவித்துள்ளது. ஒரு பங்கு 1,475 ரூபாய் என்ற விலையில் 54.23 லட்சம் பங்குகள் வாங்கப்பட உள்ளன.
இது மொத்த பங்குகளில் 0.93 சதவீதம் ஆகும். அனைத்து பங்குதாரர்களிடமிருந்தும் இந்த பங்குகள் வாங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 17ம் தேதி பங்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே, இந்த பைபேக்கில் பங்கேற்க முடியும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
