ஏப். 6-ம் முதல் மே 1 வரை நடைபெற உள்ள இந்த பயிற்சியில், தேர்வு செய்யப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் 50 பேருக்கு ஆவடி பகுதியில் உள்ள தனியார் பயிற்சி நிறுவனம் வாயிலாக தரமான நீட் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
நீட் தேர்வு உண்டு உறைவிட பயிற்சி திட்டம் மாணவர்களின் நம்பிக்கையையும் திறனையும் உயர்த்தும். இந்த முயற்சி மூலம் அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் சிறந்த முடிவுகளைப் பெற்று, மருத்துவக் கல்வியில் அதிக அளவில் சேர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) கோ.சுப்பராவ், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) (பொறுப்பு) லிங்கேஷ்வரன், பள்ளி தலைமை ஆசிரியர் லலிதா, தனியார் பயிற்சி நிறுவன பயிற்றுநர்கள் பங்கேற்றனர்.
