பட்டாபிராமில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான உண்டு உறைவிட இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்

ஏப். 6-ம் முதல் மே 1 வரை நடை​பெற உள்ள இந்த பயிற்​சி​யில், தேர்வு செய்​யப்​பட்ட அரசுப் பள்ளி மாணவர்​கள் 50 பேருக்கு ஆவடி பகு​தி​யில் உள்ள தனி​யார் பயிற்சி நிறு​வனம் வாயி​லாக தரமான நீட் பயிற்சி வழங்​கப்​பட​வுள்​ளது.

நீட் தேர்வு உண்டு உறை​விட பயிற்சி திட்​டம் மாணவர்​களின் நம்​பிக்​கை​யை​யும் திறனை​யும் உயர்த்​தும். இந்த முயற்சி மூலம் அரசுப் பள்ளி மாணவர்​கள் நீட் தேர்​வில் சிறந்த முடிவு​களைப் பெற்​று, மருத்​து​வக் கல்​வி​யில் அதிக அளவில் சேர்​வார்​கள் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது என்றார்.

இந்​நிகழ்ச்​சி​யில் மாவட்ட முதன்மை கல்வி அலு​வலர் (பொறுப்​பு) கோ.சுப்​ப​ராவ், மாவட்ட கல்வி அலு​வலர் (தனி​யார் பள்​ளி​கள்) (பொறுப்​பு) லிங்​கேஷ்வரன், பள்ளி தலைமை ஆசிரியர் லலி​தா, தனி​யார்​ பயிற்​சி நிறு​வன பயிற்​றுநர்​கள்​ பங்கேற்றனர்.

Source link