பழநி தொகுதியை 4-வது முறையாக கைப்பற்ற போவது யார்?

ஆனால், திண்டுக்கல் தொகுதியில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசனை எதிர்த்து போட்டியிட கட்சி மேலிடம் அவருக்கு அழுத்தம் கொடுத்தது. அவரோ, பழநியில் போட்டியிட்டு ‘ஹாட்ரிக்’ வெற்றிபெற விரும்பினார். இந்நிலையில் 2026 தேர்தலில் திண்டுக்கல் தொகுதி திமுக வேட்பாளராக செந்தில்குமார் அறிவிக்கப்பட்டார்.

அதேசமயம், திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பழநி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

4-வது வெற்றி யாருக்கு?

அதிமுக கூட்டணியில் பழநி தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்படும் என்று அக்கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் நம்பிக்கையுடன் தேர்தல் பணிகளை மேற்கொண்டனர். ஆனால், அதிமுக சார்பில் கடந்த முறை போட்டியிட்டு தோல்வி அடைந்த கே.ரவி மனோகரனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் பாஜகவினர் கவலையில் உள்ளனர்.

Source link