திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு நடிகை அமலாபால் வருகை தந்தார். மலைக்கோயிலுக்குச் சென்ற அவர், அங்கு நடைபெற்ற சிறப்பு உச்சிகால பூஜையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து, போகர் சன்னதிக்குச் சென்றும் அவர் சிறப்பு வழிபாடு நடத்தினார்.
