திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்றத் தொகுதியை என்.டி.ஏ. கூட்டணியில் அதிமுகவிற்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த சில நாட்களாக பாஜகவினர் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று பழனி புலிப்பாணி ஆசிரமத்தில் சிறப்பு யாகத்தை முடித்துவிட்டு வெளியேற முயன்ற மத்திய இணையமைச்சர் எல். முருகனின் காரை நூற்றுக்கணக்கான தொண்டர்கள் அதிரடியாக முற்றுகையிட்டனர்.
