“பாஜகவுடன் ஸ்டாலினுக்கு ரகசிய உடன்பாடு என மம்தா பேசுவது அபத்தம்”

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடித்து, இந்தியாவைப் பாதுகாக்க எமது தலைவர் ராகுல் காந்தி தலைமையேற்று நடத்தும் போராட்டத்தில் நீங்கள் பங்கேற்காவிட்டாலும் பரவாயில்லை. பலவீனப்படுத்த முயற்சி செய்யாதீர்கள். இந்த தேசம் உங்களை மன்னிக்காது’ எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நேற்று மேற்கு வங்கத்தில் பிரச்சாரம் செய்த மம்தா பானர்ஜி, “தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பாஜகவுடன் ரகசிய உடன்பாடு வைத்துள்ளனர்.

தேர்தல் ஆணையம் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட திறமையான ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளைத் தமிழகத்துக்கு தேர்தல் பார்வையாளர்களாக அனுப்பியுள்ளது. இதன் மூலம் மேற்கு வங்கத்தில் பாஜக தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறது. மேற்கு வங்க மாநிலத்தின் முக்கிய பொறுப்புகளில் தங்களுக்குச் சாதகமான அதிகாரிகளை பாஜக அமர்த்துகிறது” என்று அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Source link