பாடநுால் கழகம் சார்பில் நுால்கள் வெளியீடு

சென்னை: தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் சார்பில், திராவிடக் களஞ்சியத்தின் ஏழு நுால்களை, முதல்வர் ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்.

தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில், ‘திராவிடக் களஞ்சியம்’ என்ற திட்டத்தின் கீழ், பல்வேறு நுால்கள் தொகுக்கப்பட்டு வருகின்றன. அதன் முதல் பகுதியாக, நீதிக்கட்சி வரலாறு, ஈ.வெ.ராமசாமி மற்றும் அண்ணாதுரையின் சிந்தனை தொகுப்புகள், திராவிட இயக்க பெண் சிந்தனையாளர்கள், சமூக பண்பாட்டு பொருளாதார மாற்றங்கள், சிறுகதைகள் ஆகிய தலைப்புகளில் உருவாக்கப்பட்ட ஏழு நுால்களை, முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சாமிநாதன், மகேஷ், பாடநுால் கழகத் தலைவர் லியோனி, பள்ளிக்கல்வித் துறை செயர் சந்திரமோகன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

***

Source link