நெல்லை:
பாளையங்கோட்டை அருகே உள்ள நடுவக்குறிச்சியை சேர்ந்தவர் கந்தசாமி. கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவி, தங்கம் (வயது 21) உள்ளிட்ட 2 மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கோவில்பட்டி அருகே உள்ள தட்டான்குளத்தை சேர்ந்த மகராஜன் என்பவருடன் தங்கத்திற்கு திருமணம் ஆனது. அவர்களுக்கு 2 1/2 வயதில் பெண் குழந்தை உள்ளது.
திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டதால், கடந்த 1 வருடத்திற்கு முன்பு தங்கம் தனது பெண் குழந்தையுடன் நடுவக்குறிச்சியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார்.
