பிரபல பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: பிரதமர் மோடி, தலைவர்கள் இரங்கல்

இசை வரலாற்றிலேயே மிக அதிகமான பாடல்களைப் பதிவு செய்த கலைஞராக ஆஷா போஸ்லேவின் பெயர் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இவர் தமிழ் உட்பட 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் 12,000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். தமிழில் ஆஷா போஸ்லே சில பாடல்களே பாடியுள்ளார்.

எனினும் அவை அனைத்தும் சிறந்த பாடல்களாக அமைந்துள்ளன. இளையராஜா இசையில் எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில், ‘செண்பகமே செண்பகமே’ பாடல் பாடி பிரபலமானார். அதன்பின்னர் மீரா படத்தில் இளையராஜா இசையில் ‘ஓ பட்டர்ஃபிளை’ பாடல் இசை ரசிகர்களைத் திக்கு முக்காட வைத்தது.

ஹே ராம் படத்தில் ‘நீ பார்த்த பார்வைகள்’, இருவர் படத்தில் ‘வெண்ணிலா வெண்ணிலா’, வித்யாசாகர் இசையில் சந்திரமுகி படத்தில் ‘கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்’, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அலைபாயுதே படத்தில் ‘செப்டம்பர் மாதம்’ ஆகிய பாடல்களையும் பாடியுள்ளார். ஆஷா போஸ்லேவின் மறைவு லட்சக்கணக்கான இசைப் பிரியர்களுக்கு அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Source link