பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் ஏப்., 9ல் துவக்கம்

சென்னை: தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும், பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், கடந்த 2ம் தேதி துவங்கின. அதேபோல, பிளஸ் 1 அரியர் மாணவர்களுக்கான தேர்வு, கடந்த 3ம் தேதி துவங்கியது. இவர்களுக்கான தேர்வுகள் முறையே, வரும் 26, 27ம் தேதிகளில் நிறைவடைகிறது.

இதைத்தொடர்ந்து, பொதுத்தேர்வு விடைத்தாள்கள், வரும், 28ம் தேதி, மண்டல விடைத்தாள் சேகரிப்பு மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட உள்ளன.

பின்னர் அங்கிருந்து, விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களுக்கு, ஏப்ரல், 4ம் தேதி சென்றடையும்.

முதன்மை தேர்வாளர்கள் ஏப்., 8ம் தேதி, விடைத்தாள்களை மதிப்பீடு செய்வர்.

உதவி தேர்வாளர்கள், ஏப்., 9 முதல் ஏப்., 20 வரை, மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபடுவர் என, அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

Source link