டேராடூன்: உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக 5 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
கடந்த 2022-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக இரண்டாவது முறையாக வெற்றி பெற்றதை அடுத்து, முதல்வராக புஷ்கர் சிங் தாமி மீண்டும் பதவியேற்றார். அவருடன் 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
சமூக நலன் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த சந்தன் ராம்தாஸ் கடந்த 2023-ல் உயிரிழந்ததை அடுத்து, அமைச்சரவையின் பலம் 8 ஆக குறைந்தது. இதன் தொடர்ச்சியாக, நிதி அமைச்சராக இருந்த பிரேம் சந்த் அகர்வால் கடந்த ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, அமைச்சரவையின் பலம் 7 ஆக சரிந்தது. அரசியலமைப்பு விதிகளின்படி உத்தராகண்ட் அமைச்சரவையில் அதிகபட்சமாக 12 பேர் வரை இருக்கலாம்.
