புதிய முதலீட்டாளர்களை ஈர்க்க 'கிப்ட் கார்டு' பண்டு முதலீட்டை ஊக்குவிக்க செபி முயற்சி

மியூச்சுவல் பண்டு துறையில் புதிய முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காகவும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும், ‘கிப்ட் பி.பி.ஐ.,’ முறையை அறிமுகம் செய்ய செபி பரிந்துரைத்துள்ளது. இதன்படி, ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி, கிப்ட் கார்டை பெற்று, அதை மற்றவர்களுக்கு பரிசளிக்கலாம். அந்த பரிசை பெறுபவர், சம்பந்தப்பட்ட மியூச்சுவல் பண்டு நிறுவனத்தின் இணையதளத்தில் அதனை முதலீடாக மாற்றிக் கொள்ளலாம். இந்த கிப்ட் கார்டு திட்டத்தை பற்றி பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்க ஏப்ரல் 14, 2026 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்

* ஒரு கிப்ட் கார்டின் அதிகபட்ச மதிப்பு ரூ.10,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது

* ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ.50,000 வரை முதலீடு செய்யலாம்

* பணமோசடியை தவிர்க்க, கிப்ட் கார்டு வாங்குபவரின் கே.ஒய்.சி., விவரங்கள் முறையாக பராமரிக்கப்படும்

* ப ரிசை பெறுபவர் தனது பெயரில் அந்த கார்டை பதிவு செய்த பின்னரே, முதலீடு செய்ய முடியும்

* கிப்ட் கார்டுகள் வழங்கப்பட்ட தேதியிலிருந்து ஓராண்டு மட்டுமே செல்லுபடியாகும்

* ஓராண்டுக்குள் பயன்படுத்தாவிட்டால், பணம் வழங்கியவருக்கே திருப்பி தரப்படும்

* கிப்ட் கார்டுகளை வெளியிடுவதற்கான கட்டணங்களை மியூச்சுவல் பண்டு நிறுவனங்களே ஏற்கும்.

சிறு முதலீட்டாளர்களுக்கும் சமூக மேம்பாட்டு பண்டுகள் ச மூக பங்குச் சந்தையில், சிறு முதலீட்டாளர்களின் பங்களிப்பை அதிகப்படுத்தும் நோக்கில், சமூக மேம்பாட்டு பண்டுகளில் தனிநபர் முதலீடு செய்வதற்கான குறைந்தபட்ச வரம்பு 2 லட்சம் ரூபாயில் இருந்து 1,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக செபி அறிவித்துள்ளது. சாமானிய மக்களும் கல்வி, மருத்துவம் மற்றும் வாழ்வாதார மேம்பாடு போன்ற சமூக நலத்திட்டங்களில் எளிதாக பங்களிக்க வழிவகை செய்யும் என்பதால், தொண்டு நிறுவனங்கள் எளிதாக நிதி திரட்ட முடியும்.

Source link