புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தவெகவுடன் நேயம் மக்கள் கழகம் கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கட்சிக்கு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தவெகவுடன் நேயம் மக்கள் கழகம் கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கட்சிக்கு இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 9ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. அதிமுக மற்றும் திமுக கூட்டணிகள் இடையேயான தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தை கடும் இழுபறிக்கு பிறகு இறுதியானது. இந்த சூழலில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனித்து களமிறங்க முடிவு செய்து, நேற்று 30 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

இதையடுத்து, வேட்பாளர்கள் பிரசாரத்திற்கு ஆயத்தமாகி வந்த சூழலில், தவெகவுடன் நேருவின் தலைமையிலான நேயம் மக்கள் கழகம் கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கட்சிக்கு உருளையன்பேட்டை, தட்டாஞ்சாவடி ஆகிய இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே, உருளையன்பேட்டையில் மரிய பிரான்சிஸூம், தட்டாஞ்சாவடியில் பன்னீர்செல்வமும் தவெக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.

Source link