புதுடில்லி: இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் நலமுடன் உள்ளனர் என மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெயிஸ்வால் கூறியுள்ளார்.
டில்லியில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: இஸ்ரேலில் அனைத்து இந்தியர்களும் நலமுடன் உள்ளனர். இந்தியர் ஒருவர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வருகிறது. அந்த நபர் பாதுகாப்புடன் உள்ளார். இந்த விஷயம் குறித்து நமது தூதரகம் கண்காணித்து வருகிறது. மேற்கு ஆசியாவில் நடக்கும் மோதலில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் காயம் அடைந்துள்ளார். ஒருவரை காணவில்லை. இவ்வாறு ரந்தீர் ஜெயிஸ்வால் கூறினார்.
