புதுடில்லி: மேற்காசியாவில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், ஈரான் வெளியுறவு அமைச்சர் செய்யது அப்பாஸ் அரக்ஷியுடன் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார்
ஈரான் மதத்தலைவரும், ஆட்சியாளருமான கமேனி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்ததை தொடர்ந்து மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவுகிறது. வான்வெளிகள் மூடப்பட்டதால் விமான சேவை தடைபட்டுள்ளது. பலர்சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியாமல் அரபு நாடுகளில் தவித்து வருகின்றனர்.
இந்த பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியில் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. மேலும் டில்லியில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு சென்ற மத்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி, கமேனி மரணத்திற்காக வைக்கப்பட்டுள்ள இரங்கல் பதிவேட்டில் கையெழுத்திட்டுள்ளார்.
இந்நிலையில், மேற்காசியாவில் நிலவும் பதற்றம் குறித்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் செய்யது அப்பாஸ் அரக்ஷி உடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார். இதனை அவர் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
