கலிபோர்னியா: நிலவைச் சுற்றிவர கடந்த 1-ம் தேதி ஆர்டெமிஸ் -2 விண்கலத்தில் புறப்பட்ட நாசா குழுவினர், நேற்று வெற்றிகரமாக பூமி திரும்பினர்.
சுமார் 50 ஆண்டு இடைவெளிக்குப் பின் நிலவுக்கு ஆர்டெமிஸ்-2 விண்கலம் மூலம் 4 விண்வெளி வீரர்களை நாசா கடந்த 1-ம் தேதி அனுப்பியது. இந்த விண்கலத்தில் சென்ற நாசா கமாண்டர் ரீட் வைஸ்மேன், பைலட் விக்டர் க்ளேவர், கிறிஸ்டினா கோச், கனடா விண்வெளி வீரர் ஜெரிமி ஹேன்சன் ஆகியோர் நிலவில் தரையிறங்காமல் விண்வெளியில் நீண்ட தூரம் பயணம் செய்து நிலவை அருகில் சுற்றி வீடியோ, படங்கள் எடுத்தனர்.
