பெங்களூரு: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைத் தொடர்ந்து பெங்களூரு அணியும் கைமாறியது.
ஆதித்ய பிர்லா குழுமம், டைம்ஸ் ஆப் இந்தியா, போல்ட் வென்சர்ஸ் மற்றும் பிளாக்ஸ்டோன் ஆகியவை இணைந்து பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியை மொத்தமாக வாங்கியது. இரு அணிகளையும் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் நிறுவனம் 16,600 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தது.
பிசிசிஐ, ஐபிஎல் நிர்வாக குழு ஆகியவற்றின் நிபந்தனைக்குஉட்பட்டு அணி விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
