பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள்

பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிரான போரில், ஈரானுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பும், ஏமனின் ஹவுதி கிளர்ச்சிப் படைகளும் தாக்குதல் நடத்தி வருகின்றன. இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் ஏவுகணைகளை வீசி தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதற்கு இஸ்ரேல் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

அந்த வகையில், பெய்ரூட்டில் உள்ள ராம்லெட் அல் பைடா என்ற பகுதியில் உள்ள ஒரு கார் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக லெபனான் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல் காரணமாக, பெய்ரூட்டின் புகழ்பெற்ற கார்னிச் கடற்கரைச் சாலை பகுதியில் கரும்புகை கிளம்பியது. இதனிடையே, பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் உள்ள 10 ஹிஸ்புல்லா அமைப்பின் இலக்குகளை குறிவைத்து தாக்கியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

Source link