இது தவறாக புரிந்துகொள்ளப்பட்டு, ‘கரோனா காலத்தில் அறிவிக்கப்பட்டதுபோல தற்போது பொது முடக்கம் அறிவிக்கப்படக்கூடும்’ என்று வதந்தி பரவியது. இது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது: மேற்கு ஆசியப் போர் காரணமாக, உலகம் முழுவதும் நிலையற்ற சூழல் காணப்படுகிறது. இதனால் எரிபொருள், அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்
தில் ஏற்படும் மாற்றங்களை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மக்களுக்கு அவை தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய பிரதமர் மோடி அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
