தேர்தல் நாளில் அத்தியாவசியப் பணிகளில் இருக்கும் வாக்காளர்கள், தங்கள் துறையின் நியமிக்கப்பட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் மூலம் தபால் வாக்கு வசதிக்கு விண்ணப்பிக்கலாம். தீயணைப்பு, சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து, ஆம்புலன்ஸ், விமானப் போக்குவரத்து, அரசு சாலைப் போக்குவரத்துக் கழகங்கள் ஆகிய 7 துறைகள் புதிதாக இந்த வசதியின்கீழ் வருகின்றன.
தேர்தல் பணியில் இருக்கும் வாக்காளர் தனது தபால் வாக்கைப் பெற்று, அதில் தனது வாக்கை பதிவு செய்து, வசதி மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
