ஈரான் மீதான தாக்குதல்களை இரண்டு வாரங்களுக்கு நிறுத்துவதற்கான அமெரிக்காவின் முடிவை இஸ்ரேல் வரவேற்றுள்ளது.
ஆனால், இந்தத் தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தம் லெபனானுக்குப் பொருந்தாது என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவுகளின்படி, “ஈரான் உடனடியாக ஜலசந்தியை திறந்துவிட்டு, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிராந்திய நாடுகளின் மீதான அனைத்துத் தாக்குதல்களையும் நிறுத்தும் பட்சத்தில், ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை இரண்டு வாரங்களுக்கு நிறுத்திவைக்கும் அதிபர் டிரம்பின் முடிவை இஸ்ரேல் ஆதரிக்கிறது.
அமெரிக்கா, இஸ்ரேல், ஈரானின் அண்டை அரபு நாடுகள் மற்றும் உலகிற்கு, ஈரான் இனி அணுசக்தி, ஏவுகணை மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தலை ஏற்படுத்தாதிருப்பதை உறுதி செய்வதற்கான அமெரிக்காவின் முயற்சியையும் இஸ்ரேல் ஆதரிக்கிறது.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலின் பிராந்தியக் கூட்டாளிகள் ஆகியோரால் பகிரப்படும் இந்தக் குறிக்கோள்களை, வரவிருக்கும் பேச்சுவார்த்தைகளின் மூலம் அடைவதில் உறுதியாக இருப்பதாக அமெரிக்கா இஸ்ரேலுக்கு வாக்கு கொடுத்துள்ளது. இந்த இரண்டு வார கால போர்நிறுத்த உடன்பாட்டில் லெபனான் அடங்காது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
