மகன் IAS ஆகி விஜய் சாருடன் வேலை பாக்குறார்- நெகிழ்ந்து உருகிய நடிகர் சின்னி ஜெயந்த்! – actor chinni jayanths son sruthan jai narayanan ias appointed to cm vijays core executive team

நடிகர் சின்னி ஜெயந்த் தன் மகன் ஐஏஎஸ் அதிகாரியாக முதலமைச்சர் விஜய்யின் தனிப்பிரிவில் இணைந்து, அவரது அறைக்கு அருகிலேயே பணிபுரிவது குறித்துப் பெருமிதத்துடன் நெகிழ்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான சின்னி ஜெயந்த், தனது மகன் ஐஏஎஸ் (IAS) அதிகாரியாகத் தேர்வாகி, தற்போது தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் நேரடி நிர்வாகப் பிரிவில் பணியாற்றி வருவது குறித்துப் பெருமிதத்துடன் பகிர்ந்துள்ளார்.

முன்னாள் டாப் நடிகரான விஜய் சாருடன் தான் சினிமாவில் வேலை பார்த்ததையும், தற்போது தன் மகன் அவருடன் இணைந்து அரசுப் பணியில் முதன்மை அதிகாரியாகச் செயல்படுவதையும் ஒப்பிட்டு அவர் நெகிழ்ச்சியுடன் பேசியிருப்பது சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

ஒரு அப்பாவுக்கு இதை விட என்ன பெருமை வேண்டும்?

நடிகர் சின்னி ஜெயந்த் தனது மகிழ்ச்சியைத் பகிர்ந்துள்ளார்.அவர் பேசியதாவது: “என்னுடைய மகன் தற்போது ஐஏஎஸ் அதிகாரியாக முதலமைச்சர் விஜய் சாருடன் மிக நெருக்கமாகப் பணியாற்றி வருகிறார். முதலமைச்சரின் அறையில் இருந்து வெறும் 5-வது அறையைத் தான் என்னுடைய மகனுக்கு ஒதுக்கித் தந்திருக்கிறார்கள். இதைச் சற்றும் நான் எதிர்பார்க்கவில்லை. ஒரு தந்தையாக என் மகனின் இந்த அசாத்திய வளர்ச்சியைப் பார்க்கும்போது என் கண்கள் குளமாகின்றன” என்று நெகிழ்ந்துள்ளார்.

சினிமாவில் அப்பா.. அரசுப் பணியில் மகன்

இந்த நெகிழ்ச்சியான தருணத்தின் பின்னணியில் உள்ள சுவாரசியமான சினிமா மற்றும் நிஜ வாழ்க்கை ஒப்பீட்டையும் சின்னி ஜெயந்த் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த காலங்களில் தளபதி விஜய்யின் ஆரம்பகால சூப்பர்ஹிட் திரைப்படங்களான காதலுக்கு மரியாதை உள்ளிட்ட பல்வேறு படங்களில் அவருடன் இணைந்து சின்னி ஜெயந்த் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

அரசுப் பணியில் மகன் சுருதன் ஜெய் நாராயணன்

சின்னி ஜெயந்தின் மகனான ஸ்ருதன் ஜெய் நாராயணன் (Sruthan Jai Narayanan), கடுமையான உழைப்பிற்குப் பிறகு யுபிஎஸ்சி (UPSC) தேர்வில் அகில இந்திய அளவில் 75-வது இடத்தைப் பிடித்து ஐஏஎஸ் அதிகாரியாகத் தேர்வானார். தற்போது தவெக ஆட்சியில் அவர் முதலமைச்சரின் தனிப்பிரிவு அதிகாரிகளில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நான் சினிமாவில் விஜய் சாருடன் இணைந்து வேலை பார்த்திருக்கிறேன். ஆனால் இன்று என் மகன் அவருடன் நேரடியாகத் தமிழக அரசுப் பணியில் இணைந்து மக்கள் நலனுக்காக வேலை பார்க்கிறான். ஒரு சாதாரண அப்பாவுக்கு இதைவிடப் பெரிய வாழ்நாள் பெருமை வேறு என்ன வேண்டும்? என சின்னி ஜெயந்த் உருக்கமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமூக ஊடகங்களில் குவியும் வாழ்த்துகள்

சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் ஐஏஎஸ் தேர்ச்சி பெற்ற போதே சினிமா உலகினர் பலரும் வாழ்த்து மழை பொழிந்தனர்.தற்போது ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, முதலமைச்சர் விஜய்யின் தனிப்பட்ட நிர்வாகக் குழுவிலேயே திறமையின் அடிப்படையில் சின்னி ஜெயந்தின் மகனுக்கு முக்கியப் பொறுப்பும், முதலமைச்சர் அறைக்கு அருகிலேயே அலுவலக அறையும் ஒதுக்கப்பட்டிருப்பது ஒட்டுமொத்தத் திரைத்துறையினரையும், பொதுமக்களையும் நெகிழ வைத்துள்ளது. இந்தச் செய்தி தவெக தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்களாலும் இணையத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.
Source link