லைகா நிறுவனமும், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இப்படத்தை இணைந்து தயாரிக்கிறது. விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க, சாய் பல்லவி நாயகியாக நடிக்கக் கமிட்டாகி இருக்கிறார். ‘அமரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் மணிரத்னம், “நான் சாய் பல்லவியின் ரசிகன். அவருடன் இணைந்து பணிபுரிவேன் என நம்புகிறேன்.” எனக் கூறியதை சாய் பல்லவி ஆச்சரியப்பட்டு கேட்டுக் கொண்டிருந்தார். இன்று அது நடந்திருக்கிறது.
விஜய் சேதுபதி இதற்கு முன்பு மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்க சிவந்த வானம்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு இப்போது மணிரத்னம் இயக்கும் படத்தில் அவர் முதன்மை கதாநாயகனாக நடிக்கிறார். மெகா ஹிட் இசைக் கூட்டணியை இத்திரைப்படத்திலும் தொடர்கிறார் மணிரத்னம். இப்படத்திற்கும் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தின் அடுத்தக்கட்ட அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
