“மதுபானம் விற்ற பணத்தில் அரசு இயங்குவது வெட்கக்கேடு”

மது​பானம் விற்ற பணத்​தில் அரசு இயங்​கு​வது வெட்​கக்​கேடு என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் பேசி​னார்.

தேனி மாவட்​டம் ஆண்​டிபட்​டி​யில் சீமான் நேற்று பிரச்​சா​ரம் மேற்​கொண்​டார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: திமுக​வும் அதி​முக​வும் மாறி மாறி இங்கு ஆட்சி செய்​கின்​றன. ஆனாலும், டாஸ்​மாக் மூடப்​பட்​ட​தா? கொலை கொள்ளை குறைந்​துள்​ள​தா? ஆண்​டிபட்​டி​யில் திமுக மற்​றும் அதி​முக சார்​பில் போட்​டி​யிடு​பவர்​கள் ஒரே குடும்​பத்​தைச் சேர்ந்த அண்​ணன், தம்​பிகள். கடந்த முறை அண்​ணனின் வெற்​றிக்​குத் தம்பி உதவி​னார். இம்​முறை தம்​பிக்கு அண்​ணன் உதவு​கிறார்.

Source link