மதுபானம் விற்ற பணத்தில் அரசு இயங்குவது வெட்கக்கேடு என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் சீமான் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: திமுகவும் அதிமுகவும் மாறி மாறி இங்கு ஆட்சி செய்கின்றன. ஆனாலும், டாஸ்மாக் மூடப்பட்டதா? கொலை கொள்ளை குறைந்துள்ளதா? ஆண்டிபட்டியில் திமுக மற்றும் அதிமுக சார்பில் போட்டியிடுபவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தம்பிகள். கடந்த முறை அண்ணனின் வெற்றிக்குத் தம்பி உதவினார். இம்முறை தம்பிக்கு அண்ணன் உதவுகிறார்.
