மதுரை: மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று நடத்திய வாகனச் சோதனையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.50 கோடி மதிப்பிலான தங்க, வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் மற்றும் பொருள்கள் வழங்குவதை தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
