அதன்படி, ஆட்டிஸம், பெருமூளை வாதம், கவனச்சிதறல், பிறவி மரபணுக் குறைபாடு, பல்லுறுப்பு முடக்கம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதனை ஏற்றுகொண்ட தமிழக சுகாதாரத்துறை, அவசர சிகிச்சைகளுக்கு இருக்கும் நடைமுறையைப் போல், இத்தகைய பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு புறநோயாளிகள் சிகிச்சையின்போது முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அரசாணை பிறப்பித்துள்ளது. அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் இந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.
மருத்துவ கல்வி இயக்ககம், மருத்துவ சேவைகள் இயக்ககம், பொது சுகாதாரத்துறை, இந்திய மருத்துவர் சங்கம் சார்பில் அது தொடர்பான அறிவுறுத்தல்களை மருத்துவமனைகளுக்கு வழங்க வேண்டும் என்று அரசாணையில் சுகாதாரத்துறை செயலர் ப.செந்தில்குமார் உத்தர விட்டுள்ளார்.
