மும்பை: மஹாராஷ்டிராவின் கட்சிரோலியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில், நக்சலைட்டுகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
நாட்டில் நக்சல் பயங்கரவாதத்தை ஒழிக்க இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதியை மத்திய அரசு காலக்கெடுவாக நிர்ணயித்துள்ளது. இதனால் நக்சல் ஒழிப்பு நடவடிக்கை வேகமெடுத்து உள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தின் கட்சிரோலி வனப்பகுதியில் நக்சலைட்டுகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் வந்தது.
அங்கு சென்ற படையினரை கண்டதும் உஷாரான நக்சல் குழுவினர், துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில், நக்சல் அமைப்பை சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சம்பவ இடத்திலிருந்து ஆயுங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இந்த நடவடிக்கையின் போது பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு விமானத்தில் அழைத்து செல்லப்பட்டனர்.
