மாணவி கொலையில் யாரும் கைதாகவில்லை; காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதா?

அவரது கண்​காணிப்​பில் காவல்​துறை இல்​லை. டிஜிபியை கூட நியமிக்க முடிய​வில்​லை. ஆட்சி மாற்​றம்​தான் இதற்கு முடி​வாக இருக்​கும். இவர் அவர் கூறி​னார். அப்போது பாஜக மாவட்ட தலை​வர்​கள் சரவண கிருஷ்ணன், சித்​ராங்​கதன் ஆகியோர் உடனிருந்​தனர்​.

மாணவியின் தந்தை உறுதி

இதனிடையே கொலை செய்​யப்​பட்ட மாண​வி​யின் தந்தை சுப்​பு​ராஜ் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: எனது மகள் இறந்​ததற்கு காரண​மான குற்​ற​வாளி கைது செய்​யப்​பட்​டால், மகளின் உடலை வாங்க தயா​ராக உள்​ளேன். கொலை செய்​யப்​பட்டு இன்​றுடன் 9 நாட்​களாகிறது.

குற்​ற​வாளி​கள் கைது செய்​யப்​பட்​டால் தான் உடலை வாங்க வேண்​டும் என்ற முடி​வில் தான் இருக்​கிறேன். பிரேத பரிசோதனை அறிக்கை காவல் நிலையம் வந்துள்ளது. அதனை இனிமேல்தான் வாங்க வேண்​டும்.

காவல் துறைக்கு முழு ஒத்​துழைப்பு கொடுத்​துள்​ளோம். எனக்கு யார் மீதும் சந்​தேகம் கிடை​யாது. இந்த ஊரில் அனை​வரும் ஒற்​றுமை​யாக இருப்​ப​தால் யார் மீதும் சந்​தேகப்பட முடி​யாது. ஆனால் அரசுத் தரப்பில் நான் எதிர்​பார்த்த நடவடிக்கை இல்​லை. ஆனால், எனக்கு நிச்சயம் நல்ல தீர்ப்பு கிடைக்​கும் என நம்​பு​கிறேன். இவ்​வாறு அவர் கூறி​னார்.

Source link