​மாம்பழம் சின்னத்தை முடக்க கோரி மேல்​முறையீடு செய்யலாம்: ராமதாஸுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

அன்​புமணி தரப்​பில் மூத்த வழக்​கறிஞர்​கள் முகுல் ரோஹ்தகி, மீனாட்சி அரோரா ஆகியோர் ஆஜராகி, மாம்​பழம் சின்​னத்தை முடக்கி பாமகவை அழிக்க முற்​படு​கிறார். மாம்​பழம் சின்​னம் பொதுசின்​னம் இல்லை என்று சிவில் நீதி​மன்​றம் தெரி​வித்​துள்​ளது என்று வாதிட்​டனர். முன்​ன​தாக தலைமை நீதிப​தி,

எதிர்​மனு​தா​ர​ரான மகன் எப்​படி வெற்றி பெறக்​கூ​டாது என்று தந்தை நினைத்​தால் அதை வாக்​காளர்​களிடம் சென்று தெரிவிக்க வேண்​டும் என்​றார். நீதிபதி ஜோய்​மால்யா பக்​சி, மனு​தா​ரின் வாதம் அரசி​யல்​ரீ​தி​யான அழிவை உரு​வாக்​கும். வெற்றி பெற்​றால் மாம்​பழம் சின்​னம் கிடைக்​காமல் போகும் என்று தெரி​வித்​தார்.

இருதரப்பு வாதங்​களுக்கு பிறகு, சென்னை சிவில் நீதி​மன்​றத்​தின் உத்​தரவை எதிர்த்து சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் உரிய மனுவை மனு​தா​ரர் தாக்​கல் செய்ய வேண்​டும். தேர்​தல் அவசரத்தை கருத்​தில் கொண்டு தாக்​கல் செய்​யப்​படும் மனுக்​களை சென்னை உயர் நீதி​மன்​றம் விரைந்து விசா​ரிக்க வேண்​டும் என்று குறிப்​பிட்டு மேல்​முறை​யீட்டு மனுவை முடித்து வைத்தனர்.

Source link