மாம்பழம் சின்னத்தை முடக்க கோரி ராமதாஸ் தாக்கல் செய்த இடைக்கால மனுக்கள் தள்ளுபடி

அனைத்து தரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிபதி எம்​.தர்​மபிரபு நேற்​றிரவு பிறப்​பித்​துள்ள தீர்ப்​பில், “தேர்​தல் நடவடிக்​கைகள் ஏற்​கெனவே தொடங்கி விட்​ட​தால் அதில் நீதி​மன்​றம் தலை​யிட விரும்​ப​வில்​லை. பாமக​வின் மாம்​பழம் சின்​னம் தொடர்​பாக ராம​தாஸ் தரப்​பி்ல் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்ள 2 இடைக்​கால மனுக்​களும் தள்​ளு​படி செய்​யப்​படு​கின்​றன.

அதே​நேரம் ராம​தாஸ் இந்த கோரிக்​கைகள் தொடர்​பாக தேர்​தல் ஆணை​யத்தை அணுகி பரி​காரம் தேடிக்​கொள்​ளலாம். அதே​போல, நிலு​வை​யில் உள்ள பிர​தான வழக்​கில் இடை​யீட்டு மனு​தா​ர​ராக கட்​சி​யின் பொதுச் செய​லா​ள​ரான வடிவேல் ராவணனை இணைக்க வேண்​டுமென்ற கோரிக்கை ஏற்​கப்​படு​கிறது. அன்​புமணிக்கு மாம்​பழம் சி்ன்​னம் ஒதுக்​கிய தேர்​தல் ஆணை​யத்​தின் உத்​தரவை ரத்து செய்ய வேண்​டுமென்ற கோரிக்​கை​யும் நிராகரிக்​கப்​படு​கிறது” என உத்​தர​விட்​டுள்​ளார்.

உச்ச நீதி​மன்​றம் 3 நாட்​களில் இந்த வழக்​கில் தீர்வு காண வேண்​டுமென அறி​வுறுத்​தி​யிருந்த நிலை​யில், சென்னை உரிமை​யியல் நீதி​மன்ற நீதிபதி எம்​.தர்​மபிரபு 2 நாட்​களில் தீர்வு கண்​டுள்​ளார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

Source link