மாஸ்கோ: இந்தாண்டு ரஷ்யா வரும் பிரதமர் மோடியை வரவேற்க தயாராக உள்ளோம் என அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியுள்ளார். உலகளவில் 21ம் நூற்றாண்டின் வல்லரசாகவும் இந்தியாவில் செல்வாக்க வளர்ந்து வருகிறது எனவும் கூறியுள்ளார்.
இந்தியா – ரஷ்யா இடையிலான உறவு தொடர்பாக நடந்த மாநாட்டில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக அவர் பேசியதாவது: 2026 ம் ஆண்டு ரஷ்யாவில் பிரதமர் மோடியை வரவேற்க தயாராக உள்ளோம்.
இரு நாடுகளுக்கு இடையிலான உறவானது காலத்தால் நிரூபிக்கப்பட்டுள்ளது. அது சமத்துவம், பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது.அதிபர் புடின், கடந்த ஆண்டு டில்லி வந்த பிறகு இரு நாடுகளுக்கு இடையிலான நோக்கங்கள் மீண்டும் உறுதிபடுத்தப்பட்டது. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 2025 ம்ஆண்டு இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் 5.59 லட்சம் கோடி ரூபாய் ஆக இருந்தது. இதனை இந்த ஆண்டில் 9.32 லட்சம் கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பல முனை போட்டி கொண்ட உலகில், சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார மையங்களில் ஒன்றாகவும், தனித்துவமான நாகரிகமாகவும்,21ம் நூற்றாண்டின் வல்லரசாகவும் இந்தியாவில் செல்வாக்க வளர்ந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
