தமிழர்களின் அடையாளமே மொழிதான். தமிழர், தமிழ்நாடு, இப்படி நம்முடைய இனம், நாம் வாழும் மாநிலம் என எல்லாமே மொழியை அடிப்படையாக கொண்டதுதான். அப்படிபட்ட மொழியையே அழித்துவிட்டால், தமிழர்களை எளிதாக அடிமைப்படுத்திடலாம்.
தமிழர் பண்பாட்டையே அழித்துவிடலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதனால்தான், செம்மொழித் தமிழை அழிக்க, மும்மொழித் திட்டம் கொண்டு வந்தே தீருவோம் என்று அடம் பிடிக்கிறார்கள். அராஜகம் செய்கிறார்கள்.
ஒன்றிய அரசின் 2 ஆயிரம் கோடி ரூபாய் கல்வி நிதி வேண்டும் என்றால், இந்தியைப் படித்தாக வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். 2 ஆயிரம் கோடிக்காக தமிழர்களின் சுயமரியாதையை அடமானம் வைக்க, நான் ஒன்றும் காலில் விழுந்து பதவி வாங்கிய பழனிசாமி இல்லை.
மிசாவுக்கே அசராமல் எதிர்த்து நின்ற முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். மிசாவுக்கே பயப்படாதவன், அமித்ஷாவுக்கா பயப்படுவேன். நான் மக்களை சந்தித்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர். அதனால், என்னுடைய விசுவாசம் என்றைக்குமே தமிழ்நாட்டு மக்களுக்குதான்.
